அல்ட்ரா சவுண்ட் மூலம் புதிய முறையிலான கருத்தடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அல்ட்ரா சவுண்ட் மூலம் உடல் உள் உறுப்புகளை படம் பிடிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இதே அல்ட்ரா சவுண்ட் மூலம் கருத்தடை செய்யலாம் என்பதை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கருத்தடைக்கு பல்வேறு முறைகள் உள்ளன.ஆனால் அவற்றில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.வேறு சிலவற்றால் போதிய பலன்கள் கிடைப்பதில்லை.எனவே கருத்தடை முறைகள் இன்னும் முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை.
இப்போது கண்டுபிடித்துள்ள அல்ட்ரா சவுண்ட் கருத்தடை முறை முழுமையான வெற்றி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அல்ட்ரா சவுண்ட் அலைகளை உயிரணுப்பையில் தாக்க செய்து அதை செயலிழக்க செய்வது புதிய முறை கருத்தடையாகும். இந்தமுறை மூலம் உயிரணுவின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிடும்.
இதனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு முற்றிலும் நின்றுவிடும்.15 நிமிடத்தில் சிகிச்சை முடிந்துவிடும். இன்னும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
அல்ட்ரா சவுண்ட் மூலம் உடல் உள் உறுப்புகளை படம் பிடிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இதே அல்ட்ரா சவுண்ட் மூலம் கருத்தடை செய்யலாம் என்பதை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கருத்தடைக்கு பல்வேறு முறைகள் உள்ளன.ஆனால் அவற்றில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.வேறு சிலவற்றால் போதிய பலன்கள் கிடைப்பதில்லை.எனவே கருத்தடை முறைகள் இன்னும் முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை.
இப்போது கண்டுபிடித்துள்ள அல்ட்ரா சவுண்ட் கருத்தடை முறை முழுமையான வெற்றி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அல்ட்ரா சவுண்ட் அலைகளை உயிரணுப்பையில் தாக்க செய்து அதை செயலிழக்க செய்வது புதிய முறை கருத்தடையாகும். இந்தமுறை மூலம் உயிரணுவின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிடும்.
இதனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு முற்றிலும் நின்றுவிடும்.15 நிமிடத்தில் சிகிச்சை முடிந்துவிடும். இன்னும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக