RSS
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சங்கிலியன் மன்னனின் அரண்மனை, நல்லூர்

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறுடைய யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி சங்கிலி குமாரன் என்று அறியப்படும் எட்டாம் செகராசசேகரன் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் 1619ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன் முற்றுப்பெற்றது. யாழ்ப்பாண இராச்சியத்தியன் சான்றுகளாக இப்பொழுது எஞ்சியிருப்பவை நல்லூர் - சங்கிலித்தோப்பு குறிச்சியில் எஞ்சியிருக்கும் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும், மன்னன் சங்கிலியனின் சிலையுமே. இவற்றில் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும் எந்தவித பராமரிப்புகளும் இன்றி அழிவடைந்து கொண்டிருக்கின்றன.

சங்கிலியன் மன்னனின் அரண்மனை வாயில்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

நரியின் தந்திர விளையாட்டு!


இந்த தந்திரமான நரிக்குட்டியின் விளையாட்டைக் கவனியுங்கள்... குறித்த நரிக்குட்டி ஒரு இயந்திரத்தின் Belt ஐப் பயன்படுத்தி ஆனந்தமாக சறுக்கி விளையாடுவதையே படத்தில் காண்கிறீர்கள்.
நான்கு மாதங்களேயான நரிக்குட்டியே இவ்வாறு இயந்திர பெல்ட் மூலம் சறுக்கி விளையாடியது. பிரித்தானியாவின் பிரபல படப்பிடிப்பாளரான Duncan Usher இக்காட்சியை தத்ரூபமாக ஜெர்மனியின் நாட்டுப் புறம் ஒன்றில் படம் பிடித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

பிஸ்கட்டுகள் உட்கொள்ளும் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய்

நொறுக்குத்தீனிக்காக அதிக அளவில் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உட்கொள்ளும் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில் 60,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோஉக்கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது.

பிரிட்டனில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 6,400 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது என்றும் இதில் 1,000 பேர் மரணமடைவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என்ற ரீதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று கூறும் இந்த ஆய்வு பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை உண்பதால் கேன்சர் ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு மற்ற ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப் போகுமென்றால் கவலையளிக்கும் ஒரு ஆரோக்கியப் பிரச்ச்னையாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் தேடு: பிஸ்கட்டுகள், கேக், கருப்பைப் புற்றுநோய்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?


Have You Had Your Child's Vision Checked? - Child Care Tips and Informations in Tamil

நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். பல பெற்றோர்களிடம் குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர்தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமே பாழாகி விடுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் செல்லும் முன்பாகவே கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெற்றோற்களின் கவனத்திற்க்கு...
பார்வைக் குறைபாடுகள் (Refractive Errors)
பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன. பார்வைக் குறைபாட்டை மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. தூரப்பார்வை (Long sight), கிட்டப்பார்வை (Short sight) மற்றும் சமச்சீரற்ற பார்வை (Astigmatism).
பார்வைக்குறைபாடுகளின் அறிகுறிகள்:
* கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்த்தல்.
* புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படித்தல்.
* கண்களை சுருக்கிப் படித்தல்.
* தலைவலி அல்லது கண்வலி.
* மாறுகண்
- போன்றவை பார்வைக் குறைபாடுகளின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.
  
மாறுகண் (Squint)
மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு குறைபாடு. இது குழந்தையின் பார்வை மற்றும் தோற்றத்தை பாதிக்கும். இந்த குறைபாடு உள்ளவர்களை எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள் உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணமாகும். இல்லாவிட்டால் மாறுகண் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
சோம்பலுற்ற கண் (Amblyopia)
சாதாரணமாக இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளை பார்க்கும்போது, ஒரே மாதிரியான உருவம் மூளையைச் சென்றடையும். அப்படி இல்லாமல், இரண்டு வேறுபட்ட உருவங்கள் தெரிந்தால் இதை சோம்பலுற்ற கண் என்று மருத்துவ அறிஞர்கள் அழைக்கின்றனர். குழந்தையின் மூளை, நல்ல பார்வையுள்ள கண்ணிலிருந்து வரும் உருவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து வரும் உருவத்தை ஒதுக்கக் கற்றுக் கொள்கிறது. இதனால் அந்த கண்களில் நாளடைவில் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
சோம்பலுற்ற கண் ஏற்படக் காரணங்கள்:
* மாறுகண்
* பிறவியிலேயே ஏற்படும் கண்புரை
* கருவிழியில் தழும்பு
* குறைமாதக் குழந்தை
* இரண்டு கண்களிலும் வேறுபட்ட பார்வைத் திறன் இருந்தும், ஆரம்பத்திலேயே உரிய கண்ணாடி அணியாமல் இருத்தல்.
  
நோய் கண்டவுடன் செய்ய வேண்டியது
இந்த குறையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். இல்லாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும். தாமதமாக சிகிச்சை பெறும்போது இருக்கும் பார்வையை பாதுகாக்கலாம்.
கண்புரை (Cataract)
கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம்! கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையை கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளை பள்ளி செல்வதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.
டாக்டர் கல்பனா நரேந்திரன், டி,ஒ., டி என் பி. அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

குழந்தை வளர்ப்பு:அடம்பிடிக்கும் குழந்தையா....?!


Tips to handle an Adamant Child - Child Care Tips and Informations in Tamil

குழந்தைகள் விரக்தி, கோபம் அல்லது ஏமாற்றம், எரிச்சல் இவற்றை அனுபவிக்கும்போது அவர்கள் அழுதல், கத்துதல், பொருட்களை உடைத்தல், தரையில் உருளுதல், சிணுங்குதல், மூச்சைப் பிடித்துக்கொள்ளுதல், உதைத்தல், அடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இந்த நடத்தையைக் கண்டு பெற்றோர் கோபம், இயலாமை அல்லது சங்கட உணர்வுக்கு ஆளாவார்கள். சுயகட்டுப்பாட்டைக் குழந்தைக் கற்கும் நேரத்தில் இத்தகைய அடம்பிடிக்கும் நடத்தை (temper tantrums) இயல்பானது. உண்மையில் 1-3 வயதில் எல்லா குழந்தைகளும் இப்படிச் செய்வதுண்டு. பொதுவாக 4 வயதில் அடம்பிடித்தல் நிற்கும்.
இதற்குக் காரணம் என்ன?
அடம்பிடித்தல் உடல்ரீதியாகவோ அல்லது பரம்பரையாக வருவதோ அல்ல; அதிக செல்லம் கொடுத்து அல்லது தன் இஷ்டப்படி நடந்துகொள்ள விடப்பட்ட குழந்தைகளிடம்தான் இப்பழக்கம் அதிகம் காணப்படும். சில சமயங்களில் குழந்தையுடன் விளையாட நேரம் இல்லாத பெற்றோர், அதை சரிக்கட்ட விளையாட்டுப் பொருட்களையும், பரிசுகளையும் தருவார்கள். குறிப்பாக ஒரே குழந்தை இருக்கும் குடும்பங்களில் இது இன்னும் பொருந்தும். குழந்தை மனம் கலங்கி இருக்கும்போது தன் உணர்ச்சிகளை வெளியிட அடம்பிடிப்பதும் ஒரு வழியாகும்.
இதர காரணங்கள்:
* அடம்பிடிப்பதன் மூலம் கவனத்தை இழுக்க முயற்சி செய்தல்.
* பெற்றோர் என்ன சொல்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் என்று புரியாததால் குழப்பம்.
* தான் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ளாத போது.
* தன் உணர்வுகள் மற்றும் தேவைகளைச் சொல்ல வார்த்தை கிடைக்காதபோது.
* உடல் நலமின்மை அல்லது இதர உடல்ரீதியான பிரச்சினைகளால் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதபோது.
* பசி இருக்கும். ஆனால் அது பசிதான் என்று அறியாதபோது.
* களைப்பு அல்லது போதிய உறக்கம் இல்லாதபோது.
* பதற்றமும் அசௌகரியமும் இருக்கும்போது.
* நடத்தல், ஓடுதல், படிகளில் அல்லது நாற்காலியில் ஏறுதல் இறங்குதல், வரைதல், விளையாட்டுப் பொருட்களை இயங்கச் செய்தல் போன்ற வேலைகளை இன்னும் செய்ய முடியாதபோது.
* தான் செய்ய விரும்புவதைச் செய்ய அனுமதிக்கப்படாத போது எரிச்சல் அடைதல்.
இத்தகைய அடம் பிடிக்கும் செயல்களை எவ்வாறு தடுக்கலாம்?
* தாம் நம்பக்கூடிய நபர்களிடம்தான் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்று பொதுவாக குழந்தைகள் நினைப்பதால், தம் பெற்றோரிடம்தான் அதிகமாக அடம் பிடிப்பார்கள். கீழ்க்கண்ட குறிப்புகள் அடம்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க உதவும்.
* நியாயமான எல்லைகளை நிர்ணயுங்கள். குழந்தைகள் குறைபாடே இல்லாதவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் விதிகளுக்கான காரணங்களை எளிமையாகக் கூறுங்கள்; அந்த விதிகளை மாற்றாதீர்கள்.
* இயன்றவரையில் தினசரி வழக்கங்களை முடிவு செய்து வைத்திருங்கள். இதனால் எதை எதிர்பார்க்கலாம் என்று குழந்தைக்குத் தெரியும்.
* குழந்தைக்கு எரிச்சலூட்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். உதாரணமாக, குழந்தையின் திறமைக்கும் மேற்பட்ட விளையாட்டு பொருள்களைத் தருவது அல்லது பெரிய குழந்தைகளிடம் விளையாட விடுவது.
* குழந்தை அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய, அல்லது விளையாட முடியாத இடங்களுக்கு பொழுதுபோக்குக்காகச் செல்வதைத் தவிர்க்கவும்.
* உடலளவில் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். போதிய கவனம் செலுத்துங்கள்.
* மன அழுத்தம் தரக்கூடிய வேலைக்கு அல்லது அதிக செயல்பாடு இருக்கும் தினத்திற்கு முன்தினம் குழந்தைக்குப் போதிய ஓய்வு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
* அடம்பிடிக்க வழி செய்யும் செயல்களிலிருந்து கவனத்தை திசை திருப்புங்கள். வேறு செயல்பாடுகளை அறிமுகப்படுத்துங்கள். குழந்தை இருக்கும் இடத்தை மாற்றுதல் போன்ற சிறிய மாற்றம்கூட சில நேரங்களில் கவனத்தைத் திருப்பி அடம்பிடித்தலைத் தடுக்கும்.
* நல்ல முன்மாதிரிகளைக் காட்டுங்கள். குழந்தையின் முன்னிலையில், விவாதம் செய்தல், கத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதில் குழந்தைக்கு எடுத்துக்காட்டாக இருங்கள்.
* அளவுக்கதிக எதிர்பார்ப்புகள் அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும்.
அடம்பிடித்தலைச் சமாளித்தல்:
குழந்தை எப்போது அடம்பிடிக்கும் என்பதை சில சமயங்களில் பெற்றோரால் சொல்ல முடியும். குழந்தை மனம்வெதும்பியோ, எரிச்சலடைந்தோ, அல்லது பிடிவாதமாகவோ இருக்கும். அவன் அழத் தொடங்கலாம். காலை உதைத்து அழலாம். தரையில் விழுந்து அல்லது மூச்சைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கலாம். சில சமயங்களில் தெளிவான எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென அடம்பிடிக்கலாம். குழந்தை அடம்பிடிக்கும் போது கீழ்கண்ட ஆலோசனைகளில் ஒன்றைப் பின்பற்றுவது குழந்தைக்கும் பெற்றோர்க்கும் உதவக்கூடும்.
1. குழந்தையின் கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள் - உதாரணமாக, புதிய செயல்பாடு, புத்தகம் அல்லது விளையாட்டுப் பொருளுக்குத் திருப்பவும். சில சமயங்களில் குழந்தையைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தாலே குழந்தை அமைதியாகி விடும். நீங்கள் மென்மையாக குழந்தையை அணைத்து கட்டுப்படுத்த வேண்டும். வெளியே நாய் இருக்கிறது பார் என்பது போன்று ஏதாவது பேசி கவனத்தைத் திருப்பலாம். நகைச்சுவை அல்லது சிரிப்பூட்டும் வகையில் முகத்தைக் காட்டுதல் உதவலாம்.
2. அமைதியாக இருங்கள். நீங்கள் கோபப்பட்டால், அல்லது கத்தினால் நிலைமை இன்னும் மோசமாகும். அவனுடைய நடத்தைக்கு எவ்வளவு கவனம் தருகிறீர்களோ அவ்வளவு முறை அடம்பிடித்தல் திரும்பவும் ஏற்படும் என்பதை நினைவில் வைக்கவும்.
3, அழுவது, கத்துவது அல்லது உதைப்பது போன்ற சிறிய அளவிலான கோப வெளிப்பாடுகளைப் பொருட்படுத்த வேண்டாம். அவன் அமைதியடையும் வரை எதையும் பேசாமல் பக்கத்திலேயே இருங்கள்.
4. சிலவிதமான அடம்பிடிக்கும் செயல்களை பொருட்படுத்தாமல் விடக்கூடாது. பின்வரும் நடத்தையை புறக்கணிப்பதோ, ஏற்பதோ கூடவே கூடாது.
பெற்றோரை அல்லது மற்றவர்களை அடிப்பது அல்லது உதைப்பது.
அபாயகரமான முறையில் பொருட்களைத் தூக்கி எறிவது.
தொடர்ந்து கத்துவது அல்லது கூச்சல் போடுவது.
5. உங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை என்றால் அறையை விட்டுச் செல்லவும். சில நிமிடங்கள் வரை, அல்லது அழுகை நிற்கும் வரை காத்திருந்து பிறகு உள்ளே போகவும். அதன்பின் வேறு வேலையில் குழந்தையின் கவனத்தைத் திருப்பவும். புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு குழந்தைக்கு முதிர்ச்சி இருந்தால் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் அடுத்த முறை அதை எவ்வாறு கையாள முடியும் என்பதைப் பற்றியும் பேசுங்கள்.
அடம்பிடிப்பதற்காக குழந்தையை எப்போதும் தண்டிக்கக்கூடாது. அதனால் குழந்தை தன் கோபத்தையும் எரிச்சலையும் உள்ளேயே அடக்கி வைத்திருக்கும். அது நல்லது அல்ல. நீங்கள் அமைதியாகவும், புரிதலுடனும் அடத்தைக் கையாள வேண்டும்.
அடம் பிடிப்பதை நிறுத்தியதற்காக பரிசு ஏதும் தரவேண்டாம். அடம்பிடித்தால் வெகுமதி கிடைக்கும் என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டு விடும். அடம்பிடிப்பதால் எதுவும் கிடைக்காது என்று தெரிந்தால், அப்பழக்கம் தொடர்வது குறையக்கூடும்.
அழுகை தீவிரமாகவும் அடிக்கடியும் ஏற்பட்டால் அது உணர்வுரீதியான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். அடம் பிடிக்கும்போது குழந்தை தனக்குத் தானே அல்லது மற்றவர்க்கு தீங்கு ஏற்படுத்தி விட்டால் - உதாரணமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு மயங்குதல் அல்லது 4 வயதில் அடம் மிகவும் மோசமானால் - குழந்தை நல மருத்துவரிடம் பேசவும். இந்த அடத்திற்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஏதாவது காரணமும் உள்ளதா என்பதை குழந்தை நல மருத்துவர் கூறுவார். அதைக் கையாள நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் தருவார்.
குழந்தையின் வளர்ச்சியில் அடம்பிடிப்பதும் இயற்கையான பகுதிதான் என்பதை உணரவேண்டும். அடம்பிடிக்கும் குழந்தையைக் கையாளுவது எளிதல்லதான். ஆனால் அன்பு, புரிதல் மற்றும் மாறாமல் காட்டும் கவனம் இந்த வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து செல்ல குழந்தைக்கு உதவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு நகம் வெட்ட சரியான நேரம் எது?


How to trim your baby's nails? - Child Care Tips and Informations in Tamil

குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ...
* குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களைப் பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்குப் படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.
* குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.
* குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை வெட்டலாம்.
* குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.
* குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு வெட்டலாம்.
* நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான 'நெயில்கட்டர்' கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல், பிளேடு கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.
* காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்­ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.
* காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
* காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.
* கண்களை சுத்தப்படுத்தும்போது சுத்தமான துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுப்புறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

குழந்தை வளர்ப்பு:பல் தேய்க்க கற்று கொடுத்தால் போதும்!


Teach Your Children How to Brush Their Teeth - Child Care Tips and Informations in Tamil

நாமெல்லாம் பல்வலி, பற்சிதைவு வந்தால்தான் பல் டாக்டரிடம் போய் சிகிச்சை பெறும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால் அது தவறு என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்!
குழந்தை பருவத்திலேயே... அதாவது பல் முளைக்கும்போதே, பல் டாக்டரிடம் காண்பித்து, ஆலோசனை பெற்றால் பற்கள் அழகாக வளரும் என்றும் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்க ஆரம்பித்த 6 மாதத்தில் பல் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி வளரக்கூடிய பால் பற்கள்தான், பின்னால் வளரக்கூடிய அனைத்துப் பற்களுக்கும் அடிப்படை ஆதாரம்!
இந்த பால் பற்கள் எல்லாம் நெருக்கமாக வளர்ந்திருந்தால், பின்னால் முளைக்கும் பற்கள் வரிசைப் படி வளராது! குழந்தைகள் பால் குடிக்கும் போது, அந்தப் பால் வாயில் தேங்கினால் அது பற்களையும் பாதிக்கும். தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைகளை கைகளால் உயர்த்திப் பிடிப்பது நல்லது.
பால் குடித்தபின்பு, குழந்தைகளுக்கு சூடு படுத்தி ஆறிய நீரை இரண்டு தடவை குடிக்க கொடுக்கவும். இப்படி பண்ணினால், பற்களின் பாதிப்பு இருக்காது. குழந்தைகளுக்கு அதிகமாக புட்டிப்பால் கொடுப்பதால், பற்களின் வரிசை சரியாக அமையாது.
குழந்தைகளுக்கு முளைக்கும் பால் பற்கள் சீக்கிரமாக விழக் கூடாது. அப்படி விழுந்து, அடுத்து முளைக்கும் பற்கள் முன்னோக்கி வளரும். தற்போது இப்படி முன்னோக்கி வளரும் பற்களை சரிப்படுத்த நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன.
விரல் சூப்புதல், வாய் திறந்தபடி தூங்குதல், நாக்கை அடிக்கடி வெளியே தள்ளுதல் போன்ற பழக்கங்களும் பற்களை பாதிக்கும். விரல் சூப்புவதால் மேல் வரிசைப் பற்கள் வெளியேயும், கீழ் வரிசை பற்கள் உள்ளேயும் தள்ளிக் கொண்டு வளரும். 4வயது வரை விரல் சூப்பலாம். அதற்கப்புறம் விரல் சூப்புவது நல்லதல்ல. டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.
தூங்கும்போது வாய் திறந்தால் பற்கள் வெளிநோக்கி வளரும். இதற்கும் தற்போது நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. குழந்தைகளுக்கு பெற்றோர் எப்போதும் பல் தேய்த்து விடக் கூடாது. அவர்களாகவே நன்றாக பல் தேய்க்க கற்று கொடுத்தால் போதும். 3 வயது வரை எப்படி பல் தேய்ப்பது நல்லது என்பதை கற்று கொடுக்கலாம். காலை, இரவு என இரண்டு தடவை பல் தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும். குழந்தைகளுக்கு பல் தேய்ப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தால், டிசைன்கள், நிறங்களில் பல் தேய்க்கும் பிரஷ்களை வாங்கி கொடுத்தால் ஆர்வமாக பல் தேய்ப்பார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

குழந்தை வளர்ப்பு:குழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்கள்!

Mould your Children Ease out of Fear - Child Care Tips and Informations in Tamil

குழந்தைகள் கொள்ளை அழகு. ஆனால் குழந்தைகளை எழில் குறையாமலும், மனம் வாடாமலும் வளர்ப்பது எளிதானதல்ல. குழந்தைகளுக்கு இந்த உலகமே புதியதாகத் தெரிவதால் ஆர்வம் மிகுந்த பார்வையால் எப்போதும் துறுதுறுவென பார்த்துக் கொண்டிருப்பார்கள். எதையும் தொட்டுப் பார்க்க விரும்புவார்கள்.
நெருப்பு சுடுமென்று அறியாமலே அதைத் தொட்டுப் பார்க்க விரும்புவதும், உடைகள் தொல்லை தருவதாக எண்ணி களைந்து எறிய விரும்புவதும், பிறப்புறுப்புகளை வினோதமானதென்று எண்ணி தொட்டுப் பார்க்கும் விஷயங்களும் அவர்கள் அறியாமல் செய்பவை.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது சில விஷயங்கள் குழந்தைகளுக்கு பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிடும். உதாரணமாக குழந்தைகள் செய்யக் கூடாத விஷயத்தை செய்வதைப் பார்த்து நீங்கள் காட்டுக்கூச்சல் போட்டால் அது என்னவோ ஏதோவென்று அரண்டுவிடும்.
முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பும்போது ஆசிரியரைக் கண்டு பயப்படலாம், பாடம் படிப்பதை சுமையாக கருதலாம், சக மாணவர்களோடு பழக கூச்சம் கொண்டு பதட்டம் அடையலாம்.
முதலில் குழந்தைகள் எதற்காக பீதி, பயம்கொள்கிறார்கள் என்று கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அமைதியான சூழலில் அவர்களை அமர வைத்து அதற்கான காரணங்களை புரியும்படியாக விளக்க வேண்டும். அத்தகைய பீதி எண்ணங்கள் தேவையற்றது என்பதை புரிய வைக்க வேண்டும். பயத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படக் கூடாது.
உதாரணமாக குழந்தைகள் பொருட்களுக்கு தீ வைத்து விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு தீயின் குணங்களையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரியும்படியாக விளக்க வேண்டும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டால் மீண்டும் தீ வைத்து விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள்.
பயம் காரணமாக பள்ளிக்கு செல்ல அடம்பிடித்தால் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். "அப்பா எப்படி என்ஜினீயரானார், நீ அக்காவைப் போல நன்றாகப் படிக்க வேண்டாமா" என்று அவர்களின் எண்ணங்களை படிப்பை நோக்கி திசைமாற்ற வேண்டும். பள்ளியில் பிரச்சினை என்றால் ஒரு சிலமுறை அவர்களுடன் பள்ளிக்குச் சென்று அவர்கள் பயம்கொள்ளும் சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
குழந்தை நாய்களுக்குப் பயப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நாய்கள் திரியும் வழியாக அழைத்துச் சென்று இதற்குப் பயப்படத் தேவையில்லை என்று விளக்கலாம். இருட்டான பகுதியைக் கண்டு பயந்தாலோ, தனிமையில் இருக்க அச்சம் அடைந்தாலோ, பேய்க்கதைகள் போன்றவற்றைக் கேட்டு மிரண்டு போயிருந்தாலோ அதுபோன்ற சூழலை உருவாக்கி "இங்கு (இருட்டிற்குள்) பயப்படும் விதத்தில் ஒன்றும் இல்லை, டி.வி.யில் வருவது கதைதான், அதற்காக பயப்படக்கூடாது" என்று விளக்கி மாற்றம் ஏற்படச் செய்யலாம்.
குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியமானது. ஆனால் குழந்தைக்கு பள்ளிக்குச் செல்ல ஆசை இருந்தும் மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு அஞ்சி பள்ளிக்கு போக மறுத்தால், அந்தக் காரணத்தை அறிந்து அதை களைய முயல வேண்டும்.
வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளை யாரும் பின் தொடர்வதாலோ, கிண்டல் செய்வதாலோ குழந்தைகள் அந்தச் சூழலை வெறுக்கலாம். பள்ளி செல்லவும் மறுக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பது, குழந்தைகளை மாற்றுவழியில் செல்ல வைப்பது, தாமே பள்ளி வரை அழைத்துச் செல்வது போன்றவை சரியான வழிமுறைகளாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை கம்பேர் செய்வது நல்லதா

Don't compare your child to others - Child Care Tips and Informations in Tamil
பெரும்பாலான வீடுகளில் தங்களது குழந்தைகளை அவர்களது உடன் பிறந்தவர்களுடனோ அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடனோ ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாகிவிட்டது. இப்படி குழந்தைகளை கம்பேர் செய்வது நல்லதா? சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் யமுனா என்ன சொல்கிறார்? கேளுங்கள்...

முன்பெல்லாம் நம்முடைய வீடுகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு குழந்தைகளாவது இருக்கும். அவர்களை வளர்ப்பது குறித்து யாரும் பெரிதாக எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அதோடு அவர்களுக்கு அடுத்த குழந்தையின் தேவைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ அதிகம் இருக்காது. ஒவ்வொரு குழந்தையும் இன்னொரு குழந்தையின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றோ நம்முடைய வீடுகளில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். அவர்களை சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு என்று நம் குழந்தைகளை கம்பேர் செய்கிறோம். ஆனால் அதுவே அவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. குழந்தைகளை ஒருவரோடு ஒருவரை கம்பேர் பண்ணாமல் எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவது என்ற கேள்விக்கு வழி சொல்லுகிறார் குழந்தைகள் நல மருந்துவர் யமுனா.

இரண்டு என்று இல்லை; ஒரு குழந்தை இருக்கும் வீடுகளிலும் இந்த கம்பேர் செய்து பார்ப்பது இருக்கிறது. இன்றைய பெற்றோர்கள் இப்படி கம்பேர் பண்ணுவதற்கு காரணம் அவர்களுக்கு வேறு குழந்தைகளைப் பற்றி தெரியாது. அதோடு கூட்டு குடும்பமும் கிடையாது. அதனால் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவர்கள்தான் அவர்களுடன் இருக்கிறார்கள். நமக்குப் பிறந்த குழந்தை கட்டாயம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இவர்கள் இப்படி செய்யும் அப்ஸர்வேஷன் குழந்தைகள் மனதில் அப்படியே பதிந்துவிடும்.

குழந்தைகளிடம் கம்பேர் செய்வது என்பது இரண்டாவது குழந்தை பிறந்த நிமிடத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. குழந்தையின் ஒவ்வொரு பருவத்தின் வளர்ச்சியிலும் இந்த ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது பெரியவர்கள் தங்களையும் அறியாமல் செய்கிற விஷயம். இரண்டாவது குழந்தை கவிழ்ந்துகொள்ளும் போது, நடக்கும் போது, ஆட்களை கவனிக்கும்போது, சாப்பிடும்போது, உடம்பு சரியில்லாமல் போகும்போது, அழும்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பீடு நடக்கிறது. இவ, அவனைவிட வேகமா செய்யறா. அவன் உன்னை மாதிரி இல்ல என்று சொல்வார்கள். இதுபோன்ற ஒப்பீடுகள் ஒரு குழந்தையின் மனதில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய இயல்பின் அடிப்படையில் வளரும். விஷயங்களை பொறுமையாக அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் விதம் அவர்களை கம்பேர் செய்வது போல இருக்கக் கூடாது.

தொடர்ந்து கம்பேர் செய்து காண்பிக்கும்போது குழந்தைகள் மனதில் விரக்தி வந்து விடும். ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் உன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன? என்று கேட்டால் நான் என் அக்காவைவிட அழகு குறைவு. நான் அவளைவிட குறைவான வேகத்தில் எல்லாவற்றையும் செய்வேன் என்றுதான் சொல்லும். தன்னுடன் பிறந்தவர்களைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் அவர்களால் யோசிக்க முடியாது. தன்னுடைய தனித்திறமை என்னவென்றும் அவர்களுக்கு தெரியாமலே போய்விடும். அவர்களுடைய இலக்கு என்ன என்பது தெரியாது. அந்த இலக்கை அடைவதற்கான எந்தவிதமான முயற்சியும் அவர்களால் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் பெற்றோர்கள்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நான் எந்தக் காரணத்திற்காகவும் என்னுடைய குழந்தையை யாருடனும் ஒப்பிட மாட்டேன் என்று முடிவு எடுக்க வேண்டும்.

தினமும் குழந்தைகள் செய்யும் நல்ல காரியங்களை, அன்று இரவு துங்குவதற்கு முன்பு, நீ இன்று இதை எல்லாம் சிறப்பாக செய்தாய்? என்று அனைவரின் முன்பும் சொல்ல வேண்டும். அதோடு ஒப்பிடுதல் என்பது அவனுக்கு நிகர் அவனே என்ற அடிப்படையில்தான் இருக்க வேண்டும். அதாவது இந்த முறை நீ குறைவாக மார்க் வாங்கி இருக்கிறாய். ஆனால் போன முறை இதைவிட அதிகமாக வாங்கி இருந்தாய். இதற்காக நீ வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை இதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக நிறைய மார்க் வாங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.

இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக்கொண்டால் அதைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர இடையில் புகுந்து பஞ்சாயத்து பண்ணக் கூடாது. நீ பெரியவன் அதனால் அவனுக்கு இதை விட்டுக் கொடு என்று சொல்லும் போது பெரிய குழந்தைக்கு அடுத்த குழந்தையின் மீது வெறுப்புதான் வரும். இதுதான் பின்னாளில் வெட்டுக்குத்து வரை செல்லும். சம வயதுடைய எந்தக் குழந்தையுடனும் அவர்களை ஒப்பிட்டு பார்க்கவே கூடாது என்கிறார் டாக்டர் யமுனா.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

அழகு குறிப்புகள்:பெண்களின் இளமை கண்களில் தெரியும்!


கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாம்.

அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சிலந்தி வலைகளும், கோழிக்கால்களும் தோன்றத் தொடங்கும். இவ்வாறு தோன்றும் கோடுகளும் கருவளையங்களும் கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சத்துமிக்க, ஆரோக்கியமான உணவு, போதிய உடற்பயிற்சி, மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.

இதோடு மட்டுமின்றி, வாரம் ஒரு முறை கண்களுக்கான மாஸ்க்கினைக் கொண்டு சுமார் 15 நிமிடங்கள் கண்களில் வைத்துப் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வரப் புத்துணர்வைப் பெற்றிடலாம். கண்களை மூடி மூச்சை நன்றாக ஐந்தாறு முறை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். நெற்றி, கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும், பாதுகாப்பினையும் தர வேண்டும்.

கருவளையங்களை தவிர்க்கும் வழி:

கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் - A (Retin - A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது.

தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண்களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிகமானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது. கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.

கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment):

சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு. இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது.

இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடிக்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.

வேதிச் சிகிச்சை:

வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெல்லிய கோடுகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்புறங்களில் ரெட்டினாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகின்றன. அப்பகுதியை நன்று ஆறியவுடன் பார்த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

வெயிலிலிருந்து பாதுகாப்பு:

சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலெட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்குதலுக்கு ஆட்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம், சூரிய ஒளியினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றினைக் (Skin Cancer)கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண்களின் கீழேயுள்ள தசைகளில் இறுக்கத்தையும் கருமையையும் படரச் செய்கிறது.

இம்மாதிரியான பின் விளைவுகளையும், காட்ராக்ட், கருவளையம் போன்ற சீர் கேடுகளையும் தவிர்த்து விட, நல்ல தரமான குளுமைக்கண்ணாடி (Cooling Glasses)களை அணிந்து கொள்ளலாம். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்கக் கூடிய வகையில் குடை மற்றும் கிரிக்கெட் குல்லா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

தொங்கு சதைக்கு அறுவை சிகிச்சை:

கண்களுக்குக் கீழே உள்ள பகுதி மிக மிருதுவாகவும் லேசாகவும் இருப்பதால் வெகு விரைவில் அழற்சிக்கு ஆட்பட்டு விடுகின்றது. சத்தற்ற உணவும், வேலைப்பளு மற்றும் மன இறுக்கம் போன்றவை இவ்வழற்சியை மேலும் தீவிரமாக்குகிறது. சில பெண்களுக்கு மரபியல் தன்மை காரணமாகவும் இந்நிலை ஏற்படச் சாத்தியமுள்ளது. வயதாகும் பொழுது, இத்தகைய தொங்கு தசைகள் முகத்தில் பெருங் குறையை உண்டாக்கி, தோற்றத்தையே சிதைத்து விடுகின்றன.

இவ்வாறாக ஏற்படும் கொழுப்பு சதையை பிளிபிரோம் பிளாஸ்டி (Blepheroplasty) எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்து சீர் செய்து விடலாம். ப்ரோ லிப்ட் (Brow Lift) என்னும் முறைப்படி ஒழுங்கற்று இருக்கும் புருவங்களை அழகாகத் தீட்டி கண்களை இளமையோடும் புதுப் பொலிவுடனும் இருக்கச் செய்யலாம். பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய்து வரும் மருத்துவர்களின் உதவியால் இக் குறைபாட்டை அகற்றிடலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு

வானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

விண்மீன்களின் உலகம் சற்றே வித்தியாசமானது, புதுமையானது என்று பொதுவாக சொல்லாமல் நேரடியாக வானத்தில் உள்ள விண்மீன்கள் பற்றியும் அதைப்பற்றிய கூடுதல் தகவல்களையும் நமக்கு கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.

வானத்தை அண்ணாந்து பார்த்து பிரமிப்பை ரசித்துக்கொண்டிருக்கும் நமக்கு அனைத்து விதமான வானியல் துறைகளிலும் உண்மையான அறிவியல் தகவல்களை படங்களுடன் கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று நாம் வானில் உள்ள ஒவ்வொரு கிரகங்கள் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கேலக்ஸி பற்றிய அனைத்து விபரங்களையும் இத்தளத்தில் சென்று தேடலாம்.

கேலக்ஸிகளை வகைகளாக பிரித்து ஒவ்வொரு கேலக்ஸி பற்றியும் அறிவியல் ரீதியான விளக்கங்கள் மற்றும் படங்கள் வரலாற்றில் இந்த கேலக்ஸி பற்றி ஏதாவது தகவல்கள் இருக்குமானல் அதையும் விரிவாக சொல்கிறது.

ஒவ்வொரு கிரகங்களும் சுழலும் திசை எந்த மாதத்தில் எங்கு செல்லும் முப்பரிமாண படங்களுடன் காட்டுகிறது. புதுமை விரும்பிகள் முதல் வானியல் துறைப்பற்றி விரிவாக விளக்கங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ள ஒக்ஸ்போர்ட் அகராதி!


"retweet", "sexting", and "cyberbullying" இதுபோன்ற 400 புதிய வார்த்தைகள் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வார்த்தைகளை மக்கள் இப்போது பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றையும் சேர்த்து ஒக்ஸ்போர்ட் அகராதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அதிகமாக சேர்ந்துள்ளன.
குறிப்பாக "retweet" என்ற வார்த்தைக்கு, டிவிட்டர் குறுஞ்செய்திகளை மீண்டும் அனுப்பு அல்லது வேறு ஒருவருக்கு அனுப்பு என்று பொருள் தரப்பட்டுள்ளது.
அதேபோல், "sexting" என்ற வார்த்தைக்கு, ஆபாச மெசேஜ் அல்லது படங்களை அனுப்புதல் என்று பொருள் தரப்பட்டுள்ளது.
காலத்துக்கேற்ற வகையில் தன்னை மாற்றிக் கொள்ளும் ஒக்ஸ்போர்ட் அகராதிக்கு ஆங்கில புலமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

புற்களில் அற்புதமான சிலைகள்



மனிதன் கல்லில் சிலை செதுக்கியுள்ளான். மண்ணில் சிற்பம் வடித்துள்ளான். காகித்தில் சித்திரம் தீட்டியுள்ளான். இப்போ புற்களிலான சிலைகள் வடிவமைத்துள்ளான்.










  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

Pulmudai, north of Trincomalee


   
Dive MV Cordiality (www.DiveSriLanka.com)
from death to life

Pulmudai, north of Trincomalee

By Dharshana Jayawardena on 1st of May 2010
Depth: 18 Meters.

Giant towers and pillars litter this magnificent wreck

Inside the massive hold
 
In the late 1990's the LTTE sank the massive Panamanian registered MV Cordiality after killing the five chinese crew onboard.
At the time of sinking the ship was loaded with limonite and also fuel.
Today, more than a dozen years later, the ship is an oasis of life.
As we arrived at the dive site we could see the State Mineral Corporation about 1.5 KM away to the west. The ship had sunk right near the coast. In fact part of the bow was protruding out of the sea. No need for a GPS to find this ship!
As we sank beneath the waves we realized that we were diving on one of the few wall dives in Sri Lanka. In some places the hull of the ship extended right from the bottom at 15M to the surface! The exterior of the hull was a macro haven. One could spend hours here just looking at the multitude of exquisite Nudibranchs, Lionfish, Scorpionfish, Butterflyfish, Juvenile Snappers and Fusiliers that swam frantically around the massive hull.
Its all wall until one makes their way to the stern. Here you find a massive archway that leads to the rudder. It is a beautiful and a magical place. The huge pieces of steel is adorned with a a respectable growth of white Black Coral. Respectable for a ship thats only been underwater little over a decade.
We gradually swim around and ascend to the deck of the ship. We had thought the dive was over.
We were wrong.
From the deck a whole new world opened up!. The MV Cordiality possessed a massive hold that lay open to exploration!
It was almost a second dive. We descend back to 10 meters of depth and observed a vast mound of limonite at the bottom of the hold. It felt like the surface of the moon. Here huge towers, pillars and twisted pieces of metal lay around. In some places one finds what appears to be huge doorways leading to other compartments in the hold. As we swam, at one point, we saw a massive piece of ship swaying precariously over our heads like a giant guillotine - its motion was mesmerizing as well as being scary.
Suddenly an immense shoal of Snappers rushed past us. In pursuit were Giant Trevally and Tuna!
Almost one hour had gone by and we had still not finished exploring the ship. But it was time to go.
After decades of terrorism peace has finally dawned on our beautiful island and new locations are now being opened up daily.
MV Cordiality is one of the first such wrecks we explored. We know there is more.
And one day we will dive them.
(There are many dive centers in Trincomalee now. Visit Dive Centers to find out who can take you to the MV Cordiality)
Go Blog! Go blog about Trincomalee Diving!

The anchor lines of the ship

The wall heading towards the stern

It is a field of Dendronephthya
 
On the deck
 

The gargantuan rudder!

The massive archway formed by the rudder and the hull

A diver near the rudder

A Hawksbill Turtle under the debris

A massive shoal of Fusiliers

Fallen towers

Ilmonite

Massive doorways befit a land of giants

The guillotine - massive piece of steel sways precariously

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

Trincomalee in Legend and History


Aerial view of Swami Rock with Koneswaram Temple, Trincomalee.
Bird's eye view of Swami Rock, Trincomalee
map of Trincomalee and surroundings
Trincomalee and surroundings
view of Koneswaram Temple, Trincomalee.
The site of the ancient Tiru Koneswaram Temple upon Swami Rock, Trincomalee. Modern-day Tiru Koneswaram Temple may be seen in the background.

Renowned in legend and history, by a variety of names—Kōna Malai, Kōnā Malai, Tiru Kōna Malai — Trincomalee is the site of the “Sacred Hill of the Three Temples.” Situated on the eastern seaboard, the place finds mention in the Mahavamsa by the name of Gōkarna, the Sanskrit and Pali form of the Tamil KONa or Sinhalese GOna.

The Story of the Holy Hindu Shrine

On the summit of the Rock, known as the Swami Rock or the Three Swami Rock, was the “temple of unusual size and splendor, renowned through the whole of India,” the temple which was razed to the ground and despoiled by the Portuguese in 1624. Tirujnana Sambandar the Saivite saint of the 7th century AD features the temple in his devotional hymns. This is the earliest reference to the temple, which in point of time goes back to a far distant epoch.
The Pallavas of South India had considerable influence over the region, in the time specifically of the King of Ceylon, Manavanna (668—703 AD), as we learn from the Sanskrit inscriptions at Tiriyayi, 29 miles north of Trincomalee. From this and other related accounts, it is reasonable to conclude that the Pallava kings bestowed much attention to the temple dedicated to Koneswara and enlarged it considerably. From references to the “Thousand Pillared Mandapam,” it was obviously a shrine of magnificent proportions.
The Chola and Pandyan kings maintained the traditions of royal patronage. The inscriptions at the archway of Fort Frederick with the insignia of the double fish symbolism of the Pandyan kings, are eloquent of the Pandyan connections ascribed to the 13th century.
How the shrine fared at the hands of the Portuguese, and what happened thereafter, are matters of history. A good summary of the events, is what is contained in the pages of Tennent:
“In the earlier portion of their career in Ceylon the Portuguese showed the utmost indifference to the possession of Trincomalee; but after the appearance of the Dutch on the coast and the conclusion of an alliance between them and the Emperor of Kandy, Constantine de Sa, in 1622 alarmed at the possibility of these dangerous rivals forming establishments in the Island, took possession of the two ports of Batticaloa and Trincomalee, and ruthlessly demolished the “Temple of a Thousand Columns,” in order to employ its material in fortifying the heights on which it stood. Some of the idols were rescued from this desecration, and conveyed to the Pagoda of Tamblegam; but fragments of carved stone-work and slab bearing inscriptions in ancient character, are still to be discerned in the walls of the Fort, and on the platform for the guns.
The scene of this sacrilege is still held in the profoundest veneration by the Hindus. Once in each year, a procession, attended by crowds of devotees, who bring offering of fruits and flowers, repairs, at sunset, to a spot where the rock projects above the ocean—a series of ceremonies is performed, including the mysterious breaking of a cocoanut against the cliff; and the officiating Brahmin concludes his invocation by elevating a brazen censer above his head filled with inflammable materials, the light of which, as it burns, is reflected far over the sea.” (Tennent’s Ceylon, Vol. II, pp. 484-485).

Tirukoneswaram, circa 1935
Devotees gather at Tirukoneswaram sacred site, circa 1935

Recent Discoveries

The destruction was so overwhelming that objects hurriedly hidden, or submerged under the debris or consigned to the sea, continue to be revealed from time to time. Among such are the three images discovered on a day in July, 1950—Siva as Chandrasekhara, Siva as Somaskanda, and Parvati. These with the four figures discovered earlier, including figures of Ganesa and Parvati seated, make a total of seven images. Undersea explorers have recently taken submarine photographs of the place, and incidentally discovered the remains of the ancient Hindu temple deep down near the seabed.
The temple is now in process of reconstruction, after a lapse of some 380 years following its destruction. A number of structures have already come up and the work is proceeding.

Buddhist Reminiscences

Trincomalee and its environs are sacred to the Buddhist as to the Hindu. Tiriyayi 29 miles north of Trincomalee is a place of Buddhist interest. Here has been discovered the ruins of an ancient Buddhist monastery, with the standing structure of a vatadage, an architectural type, distinctively Sinhalese, occupying an area of about an acre in extent. In the centre of the premises is the ruined stupa. Below the hill extends to the East, the blue sea—the Bay of Bengal and an unbroken stretch of forest on all the other sides. A Sanskrit inscription on a rock gives the name of the shrine, the Giri Kandi Caitiya. The shrine is of great value to the Buddhists, for within it is believed to have reposed the very first relics of the Buddha. At the four entrances to the shrine are moonstones of high artistic merit. Among the other striking features are the guard stones of the makara and the naga.

The Harbor

To begin with features sacred, is not to belittle or depreciate the other manifold fascinations of Trincomalee. Nature has endowed the region with a beauty and grace that has not been excelled by man. No doubt, man here has enriched Nature’s gifts, so much so, that Trincomalee today is a product of both aspects harmoniously blended.
Its importance as a place of strategic consequence guided its destinies in modern times. The great European powers vied with one another for the mastery of the harbor. The Portuguese, the Dutch, the French and the English, each held it in turn, and many a sea fight was staged off the cliffs of Trincomalee. Of all harbors in the East, it can be said that it is largely today as Nature endowed it.
Commanding the finest view in all the station, are the terraced high lands overlooking the harbor—the site on the eminence of which stands the most commodious and attractive of the hotels of the place, the Welcombe Hotel. Below stretches in all its splendor the placid waters of the harbor, with but the gentlest of ripples playing over its surface as the soft wind blows over its wide expanse. To all appearance, more a lake set in natural surroundings, than an inlet of the sea, the view of the harbor from the terraced premises of the hotel is a sight most refreshing, physically and mentally. Guarding the entrance to the harbor are the pair of projecting headlines, much as the twin figures of dwarapalas at the entrance to one of the temples of Anuradhapura. It is the temple of Nature that these headlines safeguard. Far away in the distant horizon is a thickly wooded strip of land which “connects the landscape with the quiet of the sky.”
Irregular in outline all around as Nature made it, this enhances the charm of its setting. A carriage road winds along the northern and eastern sections of the harbor.
The situation of Trincomalee in an environment comparatively less developed and sparsely populated, has been a handicap in the past ages, to its advancement. Nevertheless plans to develop Trincomalee as a commercial seaport are under way. These hold forth rich promise of brighter days. Its gifts as a natural harbor may ere long bear fruit, as a commercial port of immense consequence to the economy of Ceylon.
Kanniyayi hot springs, Trinco

The Hot Springs

Among the sights of the place are the seven hot springs of Kanniyayi, on the road to Trincomalee. About a mile on a side road branching from the main route, the springs are worth a visit. A high wall assembles all the seven springs in a rectangular enclosure. Each enclosed in a dwarf wall forms a well of its own. The water is mildly hot; the temperature varies but slightly in each. In effect, a public bathing resort, the use of the springs is controlled by the neighboring Mari Amman Kovil who holds the lease of the wells. The site of the springs is crown land.

See also Discovery of Ravana's swayambhu lingam
home

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

பழங்காலத்தை சேர்ந்த அரிய வகை ஈல் மீனினம் கண்டுபிடிப்பு

மிக பழங்காலத்தை சார்ந்த ஈல் மீன் வகையை பாலே குடியரசு கடற்கரைப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈல் மீன் உடல் மிக ஒல்லியாகவும் சிறிய துடுப்புகளையும் கொண்ட ஆதிகால மீன் வகையாகும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீன் முந்தய காலத்தில் வாழ்ந்த மீனின் உடலியல் அமைப்பைக் கொண்டதாக உள்ளது.
இந்த மீன் இனத்தில் இதர 19 குடும்ப வகைகள் மற்றும் 800 ஈல் வகை மீன்களில் காணப்படாத அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த புதிய ஈல் மீன் ஆய்வுக் கண்டுபிடிப்பு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி றொயல் சொசைட்டி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பழங்கால மற்றும் தற்போது உள்ள ஈல் மீன் இனத்தின் இரு அம்சங்களும் பாலே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மீனில் காணப்பட்டன. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தய ஈல் மீன் இன பண்புகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீன் வகையில் தெரியவந்துள்ளது. ஸ்மித்சோனிசன் தேசிய அருங்காட்சியக ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

கணணியில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது.
இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிசெய்து கொள்ள கடைபிடிக்க வேண்டியவைகள்:
1. காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் சுறுசுறுப்பாக உணர்வதுடன் உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
2. நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத நாற்காலிகளைப் பயன்படுத்தினால் ஒரு துண்டை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள்.
சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின் அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
3. முதுகை வளைத்து கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால் முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
4. பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.
கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
5. கணணி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அலர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள்.
இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். "ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்" ஐ கணணித் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.
6. உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.
7. இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம்.
கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

History of Ajanta Caves

Preface:
In the early 19th century (year 1819) some British soldiers were out hunting in the Deccan plateau. One of them suddenly saw, from a height, a horseshoe rock; His curiosity aroused by the entrance of a cave. The hunting party ventured across the ravine of the Waghur River. And they discovered several caves, against which bush, shrubs earth and stones had piled up. Goatherds for shelter were using a few.
The Government was informed about this finding and soon the Archaeologists began excavate them. Many experts have been restoring them during the last fifty years. The shock of discovery was worldwide.
All the rock-cut caves had paintings on verandahs, inner walls and ceilings, these revealed some of the most beautiful masterpieces of world art.
In the grottos were also symbolic Buddhist mounds called Stupas, and cells for monks called viharas. There were giant sculptures of Buddha's, Bodhisattvas (potential Buddha's), or Taras (female Buddhist divinities), as also dwarapalas (doorkeepers).
Later, an inscription was found of King Harisena ('moon among princes'), of the Vakataka dynasty of the 5th -6th century A.D. in cave No.17. It seems that the local Vakatakas had relations, thought marriage, with the great Gupta kings of the north.
NUMBER OF CAVES:
The total numbers of caves are 28. Most of them were finished, A few were half finished, A pathway, scooped out from stone, runs as a crescent by the caves for pedestrians. From this, one can have a glorious view of the ravine below.

SITING
For many years, expert scholars and other learned men form all over the world, have visited the Ajanta caves. Millions of pilgrims and tourists have been there. Every one wonders why the caves were scooped out on this particular horseshoe rock, in the middle of the Deccan Plateau.
The great scholar, late Prof. D.D. Kosambi, suggested that all the caves in the caves in the Western Ghats, from shudhaghar, through Karla, Bhaja, Nasik, Pitalkhora, to Ajanta are located on the crests of an ancient trade route from the Arabian sea in to the Deccan. This may be one good reason, which can explain the carving in the Ajanta rocks, nearby were the Mandis or trade centers, of Deogiri and Jalgaon.
The second reason was clearly the texture of the granite rock. This was in layers, which could be easily cut with instruments available to the craftsman in those days.
The third reason is that the Buddhist monks always preferred to live in secluded spots. They went to collect alms from the village and small towns and trade centers, but came back for quiet contemplation in ravines and gorges, away from the crowds.
RELIGIOUS SIGNIFICANCE:
The painting and sculptures in the caves are of Buddhist origin; Gautama Buddha (600 B.C.) was against painting and Sculpture. He forbade image of himself. Also he was against the use of colorful clothes such as may excite desire he did not admit women to the order of nuns. He felt that all life was pain. The best way to attain salvation (Nirvana) was to suppress all for happiness.
Why then did the monks paint pictures of the Buddha or monks images of him and potential Buddha's?
After the death of the Buddha, many aboriginal and suppressed people accepted the faith of the 'Enlightened one'. It is well known that, with illiterate people, images come before ideas, these converts wanted to worship images of the Buddha and his incarnations, as the Hindus worshipped their gods. The Buddhist monks made up many stories of Gautama's previous incarnations. For instance, he was supposed to have been a lotus at one time in another birth, he was an elephant. In still another birth, he was prince; the monks painted these human stories. Also they were carved in reliefs near the symbolic Stupa or mound grave, over the Buddha's relics like his tooth or hair Neil. The pilgrims began to worship the symbolic painting and images. And then the monks raised this kind or worship into a holy ritual. The Hinayana or the phase of Buddhist denial of pleasure, thus slowly become Mahayana, the Buddhism of acceptance of desire - so long as men and women may remember the pain of existence.
To sum up the difference the Hinayana and the Mahayana phases of Buddhism, we may say:
The Hinayana Buddhism asked the people to rely on themselves and practice the eightfold path of right behavior. The Buddha was not like Hindu God, Whom the worshipper could ask for help.
The Mahayana made the Buddha almost into gods perhaps under the influence of Hinduism, by the time this more liberal faith emerged, Buddhism accepted women in the Sangha, or the order of monks and nuns, and promised to help people to attain Nirvana by practicing certain rites. By the time the Ajanta caves were carved, the Buddhists had evolved imagery almost parallel to the Hindus.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

பெண்ணின் நெருங்கிய நண்பனாக மாறிய டொல்பின்!


தனது அன்பான துணையைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார் Ute Margreff என்ற இளம்பெண். அது வேறு யாரும் அல்ல mara என்று அழைக்கப்படும் டொல்பின் மீனே அந்தப் பெண்ணின் நெருங்கிய துணையாகும்.
43 வயதான குறித்த பெண் நிபுணரே உலகம் முழுவதிலும் உள்ள டொல்பின் மீன்களின் தனித்துவம் பற்றி கடந்த 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
அவர் தற்போது அயர்லாந்து நாட்டின் Galway பிரதேசத்தில் தங்கியிருந்து டொல்பின் மீன்கள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகின்றார்.
அங்கு mara உடனான தனது அற்புதமான உறவையும் நேசிக்கிறார்.

உயிரினங்களின் உள்ளக தொடர்பு கொள்ளும் முறை குறித்து கற்பது முன்னோடியானது என்று கூறுகின்றார் Ute Margreff.
கடல் படுக்கையில் இருந்து உருவாகும் உணவுச் சங்கிலிச் செயன் முறையானது இல்லாமல் போகும் நிலைக்கு வந்துள்ளதாக அவர் உலகத்துக்கு எச்சரித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit